கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் எதிரில் அரசு மதுக்கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு நாள்தோறும் ஏராளமான மது பிரியர்கள் வருகிறார்கள். அவர்கள் சாலையில் ஆங்காங்கே இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மது குடித்து விட்டு பஸ் நிலையம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் பலரும் தகராறில் ஈடுபடுகிறார்கள். இதனால் பயணிகளும், பொதுமக்களும் அச்சமடைகிறார்கள். மேலும் மது போதையில் இரு சக்கர வாகனங்களை தாறுமாறாக ஓட்டி பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறார்கள். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த அரசு மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.