அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பகுதியில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை அந்த வழியாக செல்லும் பொதுமக்களையும், மாணவ-மாணவிகளையும் கடிக்க பாய்கிறது. இதன் காரணமாக அனைத்து மக்களும் பயத்துடன் சாலையில் நடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது. மேலும், இவற்றால் விபத்து அபாயமும் அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.