வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-03-08 13:03 GMT

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் தினமும் டிப்பர் லாரிகளில் கிரஷர் மண் மற்றும் ஜல்லிக்கற்கள் ஏற்றி செல்லப்படுகிறது. இவ்வாறு செல்லும் லாரிகளில் அரசின் விதிப்படி முறையாக தார்ப்பாய் கொண்டு மூடி செல்வது இல்லை. இதனால் காற்றில் மண் துகள்கள் பறந்து சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது விழுவதால், அவர்கள் பெறும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்