பெரம்பலூர் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் வெளியூர் செல்லும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக பொது சுகாதார கழிப்பிட வசதி ஏதும் இதுவரை கட்டப்படவில்லை. சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சேரி, வேலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும், சென்னை மார்கத்தில் இருந்தும், பெரம்பலூர் வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணம் செய்து துறைமங்கலம் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் இறங்கும் பயணிகள் வசதிக்காக இப்பகுதியில் பொது சுகாதார வளாகம் அல்லது கட்டண கழிப்பிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.