மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வாகனத்தில் செல்லும்போது தெருநாய்கள் துரத்துவதால் விபத்து நடக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் முதியவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் சாலைகளில் நடந்து செல்ல மிகவும் அச்சப்பட்டு செல்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?