தெருவிளக்கு அவசியம்

Update: 2026-03-08 11:53 GMT

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், எம்.தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சென்னம்பட்டி கிராமத்தில் மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்திற்கு செல்லும் தார்சாலையில் மின் கம்பங்கள் இருக்கின்றன. ஆனால் தெரு மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதியே இருளில் மூழ்குவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மின் கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்த ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்