சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சில நாட்களாக கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்கள் இரவில் சரியான தூக்கமின்றி சிரமப்படுகின்றனர். மேலும் கொசுக்கடியால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க முன்வருமா?