கடத்தூர் அருகே உள்ள லிங்கநாயக்கன்அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பஸ் நிறுத்தத்தில் மின்மோட்டார் வசதியுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த மின்மோட்டார் கடந்த பல மாதங்களாக பழுது ஏற்பட்டு சரி செய்யப்படாமல் உள்ளது. மேலும் குடிநீர் தொட்டி பள்ளமான பகுதியில் உள்ளதால் மழைக்காலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறுவதால் குடிநீர் பிடிக்க சிரமப்படுகின்றனர். எனவே இதை நம்பி இருக்கும் 30 குடும்பங்களின் தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். எனவே இந்த பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.