சீரமைக்கப்பட்டது

Update: 2026-03-01 12:40 GMT

நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து வேப்பமூடு செல்லும் சாலையின் திருப்பத்தில் கழிவுநீர் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைத்து நடைபாதை அமைக்கப்பட்டு இருந்தது. அவ்வாறு ஓடையின் மீது அமைக்கப்பட்டிருந்த சிலாப்புகள் உடைந்து காணப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு இருந்தது. இதுபற்றி தினந்தந்தி புகார்பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த சிலாப்புகளை அகற்றி விட்டு அந்த இடத்தில் இரும்பினால் ஆன தடுப்புகள் அமைத்தனர். செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-செல்வகுமார், தென்தாமரைகுளம்.

மேலும் செய்திகள்