பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மது பாட்டில்கள் வாங்கும் மதுப்பிரியர்கள் பஸ் நிலைய வளாகத்தில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பெண் பயணிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே பஸ் நிலைய வளாகத்தில் மது அருந்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.