உடற்பயிற்சி கூடம் திறக்கப்படுமா?

Update: 2026-02-22 13:50 GMT

பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அந்த உடற்பயிற்சி கூடம் திறக்கப்படாமலே உள்ளது. இதனால் இளைஞர்கள் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் அதிக காசு கொடுத்து உடற்பயிற்சி செய்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த உடற்பயிற்சி கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்