தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன. தினமும் ஏராளமான இளைஞர்களும் பட்டதாரிகளும் பயன்படுத்த ஏதுவாக, அமைக்கப்பட்டிருந்த அரசு நூலகம், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் நீண்ட காலமாக பூட்டியே கிடைக்கிறது. இதனால் இளைஞர்களும், பட்டதாரிகளும் ஏமாற்றம் அடைகின்றனர். இந்த நூலகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?