ஊத்துக்குளி ரோடு டி.எம்.எப். மருத்துவமனை அருகில் பஸ் நிறுத்தம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அங்கு ரோட்டின் இருபுறமும் பயணிகள் நிழற்குடை இல்லை. பயணிகள் அனைவரும் வெயில்,மழை காலங்களில் ஒதுங்கி நிற்க கூட இடம் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மக்களின் நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டும்.