விருதுநகர் அருகே கோட்டையூர் பஸ் நிலையத்தில் உள்ள பஸ் பயணிகள் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் வெளியே காத்து நிற்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நிழற்குடையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?