பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கவுல்பாளையம் முன்பாக சாலையோரம் உள்ள மரத்தின் கிளைகள் முறிந்துள்ளது. முறிந்த மரக்கிளைகள் சாலையில் கிடக்கிறது. இந்த மரக்கிளைகள் அகற்றப்படாததால், அந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சாலையில் முறிந்து கிடக்கும் மரக்கிளைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.