சேந்தமங்கலம் அருகே உள்ள புறவழிச்சாலை வழியாக சரக்கு மற்றும் சரக்கு இல்லாத வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சில நேரங்களில் சரக்கு வாகனங்களின் மேற்கூரையில் தொழிலாளர்கள் உட்கார்ந்து கொண்டும், சிலர் படுத்துக் கொண்டும் பாதுகாப்பு இன்றியும் பயணம் செய்கின்றனர். இதனால் அந்த வாகனங்களில் இருந்து கீழே விழுந்து உயிரை இழக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே ஆபத்தான பயணத்தை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.