பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தின் பின்புறம் உள்ள மைதானம் அருகே காலி இடத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் பள்ளி சுற்றுப்புர பகுதிகளில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.