பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அவ்வையார் தெரு துணை மின் நிலையம் அருகில் உள்ள பகுதிகளில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அப்பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் குழாய்களை உடைப்பது, குழந்தைகளை துரத்துவது, வாகனங்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் வேதனை அடைந்து வருகின்றனர். எனவே குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.