சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

Update: 2026-01-04 11:51 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறையில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் கிழக்குப் பகுதியில் உள்ள பெரிய ஓடை வழியாக மழைநீர் வருகிறது. இந்த ஓடையை சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் தூர்வாரி சீரமைத்தனர். இந்நிலையில் மீண்டும் தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து காடுபோல் காட்சியளிக்கிறது. மேலும் இறைச்சி கடைகள் மற்றும் ஓட்டல்களில் உள்ள கழிவுகளை அப்பகுதியில் கொட்டிவருகின்றனர். இதனால் அப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்லும் பள்ளி மாணகர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளையும், சீமைக்கருவேல மரங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்