வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் அருகே இருந்த மின்கம்பம் கான்கிரீட் பெயர்ந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. இதுகுரித்து ராஜா என்பவர் அனுப்பிய பதிவு புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் நடப்பட்டது. புகார்பெட்டியில் செய்தி வெளியிட்ட தினதந்திக்கும் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.