விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகின்றது. இதனால் காலை அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதோடு நேரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.