திருச்சி மாநகராட்சி காமராஜபுரம், பொன் நகர், செல்வ நகர், பெரியமிளகுபாறை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் உறக்கம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் இரவு நேரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.