தெருநாய்கள் தொல்லை

Update: 2025-12-21 11:43 GMT

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகளும், கடைகளும் உள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கீழப்பழுவூர் பஸ் நிலையத்தை சுற்றிலும் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளையும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களையும் கடிக்க பாய்ந்து அச்சுறுத்தி வருகின்றன. மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களின் குறுக்கே சென்று விழுவதால் பலரும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்