ரெயில்வே மேம்பாலத்தில் பள்ளம்

Update: 2025-12-07 16:35 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேலவாளாடி ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து நெ.1 டோல்கேட் வழியாக லால்குடி, அரியலூர், ஜெயங்கொண்டம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் இந்த மேம்பாலத்தில் ஒவ்வொரு இணைப்பிலும் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கம்பிகள் சேதம் அடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் பாலத்தில் இரு பக்கவாட்டு சுவர்களின் ஓரங்களில் மழைநீர் வடிவதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகால் குப்பைகளால் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மழை பெய்யும் சமயங்களில் தண்ணீர் பாலத்தின் நடுவே ஓடுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்