பெரம்பலூர் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் இடங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் பஸ்கள் செல்ல போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.