ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள், முதியவர்கள் சரியான தூக்கமின்றி அவதியடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்கடியால் டெங்கு,மலேரியா போன்று தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள முன்வருமா?