மதுரை ஒத்தக்கடை- திருவாதவூர் செல்லும் முக்கிய சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாவதோடு விபத்துகளை சந்திக்கும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?