மதுரை தபால் தந்திநகர் பார்க் டவுன் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவில் சரியான தூக்கமின்றி குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் அவதியடைகின்றனர். மேலும் கொசுக்கடியால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே மேற்கண்ட பகுதியில் கொசு மருந்து அடித்து கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.