விருதுநகர் கலைஞர் நகரில் உள்ள பாலம் கடந்த சில நாட்களுக்கு முன் மழைக்காலத்தில் முற்றிலுமாக பழுதடைந்தது. ஆனால் தற்போது வரை இதனை சீரமைக்கவில்லை. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அப்பகுதி மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்ட புதிய ஓடைப்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.