பழனி சண்முகபுரம், ரெட்கிராஸ் ரோடு, உழவர் சந்தை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படவில்லை. இதனால் அந்த சாலைகள் மேடு, பள்ளமாக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.