சின்னசேலத்தில் சேலம் செல்லும் சாலையின் இருபுறமும் மழை நீர் வடிகால் வசதி இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் தற்போது பெய்யும் வடகிழக்கு பருவமழையால் மழைநீர் வழிந்தோட வழியின்றி சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதி்காரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.