தெருவிளக்குகள் மாற்றப்படுமா?

Update: 2025-10-26 13:26 GMT

பெரம்பலூர் மாவட்டம் காரை கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் சாலையில் சென்றுவரும் வகையில் சாலை ஓரத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் போதிய வெளிச்சம் இன்றி மங்கலாக எரிவதால் இரவு நேரத்தில் இப்பகுதி போதிய வெளிச்சமின்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்