தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் யூனியன் குலசேகரமங்கலம் ஊராட்சி த.சுப்பையாபுரத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்ததால் இடித்து அகற்றினர். பின்னர் 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்படவில்லை. எனவே புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.