சங்கரன்கோவில் திருவுடையான் சாலையில் உள்ள பெயர் பலகையை சூழ்ந்து புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. மேலும் பெயர் பலகையை மறைக்குமாறு விளம்பர பதாகைகளும் வைத்துள்ளனர். இதனால் வெளியூர் பயணிகள் வழிதெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே பெயர் பலகையை மறைக்கும் புதர் செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.