மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதி லட்சுமிபுரம் எல்.எல்.ரோடு மற்றும் அதன் சுற்ற வட்டார தெருக்களில் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் இரவில் தூக்கமின்றி மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் டெங்கு, மலேரியா போன்று நோய் பரவும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.