பட்டுக்கோட்டை பகுதி பொன்னவராயன் கோட்டை கிராமத்தில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். வீடுகளில் வளர்க்கப்படும் கோழி,ஆடுகளை வேட்டையாடுகின்றன. இவற்றால் பொதுமக்கள் அதிகளவில் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகன் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.