பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் குரும்பபாளையம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்கள் வேலை நிமித்தமாக சுற்றுவட்டார பகுதிகளுக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று வர போதிய பஸ் வசதி இல்லை. இதனால் அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரும்பபாளையம் கிராமத்துக்கு பஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.