விழுப்புரம் அடுத்த மேட்டுத்தெரு நங்காத்தூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை துரத்தி கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் பெரும் அச்சத்துடனேயே வெளியில் சென்று வருகின்றனர். எனவே இப்பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.