ரிஷிவந்தியம் அடுத்த ஈருடையாம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்குநாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இவைகள் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க விரட்டிப்பாய்கின்றன. இதனால் அவர்கள் பதற்றத்தில் சாலையில் இடறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.