விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் கிராமம் காலனி பகுதியில் சாலை, குடிநீர் மற்றும் ஓடைப்பாலம் போன்ற போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுப்பார்களா?