விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றினை கருவேல மரங்கள் முற்றிலுமாக ஆக்கிரமித்து உள்ளன. இதனால் அப்பகுதி நீர்நிலை முற்றிலுமாக மாசடைவதுடன் இதில் குப்பைகளும் அதிகளவில் தேங்குகின்றது. எனவே ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி ஆற்றை தூர்வார மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது