பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2025-09-14 14:53 GMT

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிதிலமடைந்து எப்பொது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்