‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-09-14 13:46 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு முன்பாகவே இப்பகுதியில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் மது பாட்டில்களை பதுக்கிவைத்து சிலர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய இடத்தில் சோதனை செய்து, சட்டவிரோத மது விற்பனையை தடுத்து நிறுத்தினர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்