ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சரியான தூக்கமின்றி அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்று தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.