தஞ்சை ஜோதி நகர், மருதம் நகர் , ஹரி நகர், ரம்யா நகர், ராதாகிருஷ்ணன் நகர், மருது பாண்டியர் நகர், அழகரசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையில் நடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.