கரூர் மாவட்டம் தளவாபாளையம் அருகே பிலிப்நகர் தெருவில் உள்ள பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், சுவர்களில் சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நிழற்குடையின் வெளியே சாலையில் மழையிலும், வெயிலிலும் பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். இதனால் அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.