தென்காசி மங்கம்மாள் சாலை பொதிகை நகரில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழியின்றி ஒரே இடத்தில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் நிலத்தடியில் கழிவுநீர் கலந்து தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. எனவே கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.