பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இந்த பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்காக போதிய இருக்கைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் தாங்கள் செல்லும் ஊர்களுக்கு பஸ்கள் வரும்வரை கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கென போதுமான இருக்கைகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.