கரூர் மாவட்டம் புகழூர் ஊராட்சி சார்பில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மைய கட்டிடம் நன்செய் புகழூர் தவுட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி எதிரே கட்டப்பட்டது. இந்த சேவை மையம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்ட நிலையில் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. இதனால் புகழூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் வேலாயுதம்பாளையம், பரமத்திவேலூர் பகுதிகளுக்கு சென்று அவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். இதனால் அவர்கள் கடும் அவரியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேவை மைய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.