உளுந்தூர்பேட்டை அருகே மேட்டுபரிந்தல் கிராமத்தில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதனை தடுக்க அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.